Published : 10 Jul 2016 12:00 PM
Last Updated : 10 Jul 2016 12:00 PM
அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் ஹெச்1 பி மற்றும் எல்1 விசாக்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதைத் தடுக் கும் வகையிலான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டால் இந்திய நிறுவனங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
ஹெச் 1பி விசா அமெரிக்கா வில் தங்கி பணிபுரிய வெளிநாட்டி லிருந்து பணியாளர்களை அழைத்து வருவதற்கு அளிக்கப் படுவதாகும். அமெரிக்கா தவிர வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப்படும் விசா எல்-1 விசாவாகும்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த பில் பாஸ்க்ரெல் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டானா ரோஹ்ராபாச்சர் ஆகிய இருவரும் `ஹெச்1 பி மற்றும் எல் 1 சீர்த்திருத்த சட்டம் 2016’ என்ற மசோதாவை அமெரிக்க பிரநிதிகள் சபையில் தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்ட வரைவில் ஹெச்1 பி விசாவில் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய இந்திய ஐ.டி நிறுவனங்கள் ஹெச்1 பி விசா மற்றும் எல்1 விசாக்களை மட்டுமே நம்பி இருக்கின்றன. இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த மசோதாவை கலிபோர் னியா மற்றும் நியூஜெர்சியை சேர்ந்த இரண்டு பேர் தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு பகுதி களிலும் இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மசோதாவை சட்டமாக மாற்றுவதற்கு அதிபர் பாராக் ஒபாமா கையெழுத்து போடுவதற்கு முன்பாக செனட் சபையில் நிறைவேற்ற வேண்டும்.
``அமெரிக்கா அதிக திறமை யானவர்களையும் மிகுந்த தொழில் நுட்ப அறிவு கொண்டவர்களையும் உருவாக்கி வருகிறது. ஆனால் அவர்களுக்கு வேலை இல்லை. சில தொழில் நிறுவனங்கள் விசா திட்டங்களை தவறான முறைகளில் பயன்படுத்தி வருவ தால் எங்களுடைய வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது’’ என்று பாஸ்க்ரெல் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT