Published : 03 Jul 2016 11:34 AM
Last Updated : 03 Jul 2016 11:34 AM
மகாநகர் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை தனது முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கின. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளி யானது. இந்த நிறுவனத்தின் பங்கு களை வாங்க 64.54 மடங்குக்கு விண் ணப்பங்கள் குவிந்தன. 421 ரூபாய்க்கு பங்குகள் ஒதுக்கப் பட்டன. முதல் நாள் வர்த்தகத்தில் அதிகபட்சம் 30 சதவீதம் உயர்ந்து 549 ரூபாய் வரை இந்த பங்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 24 சதவீதம் உயர்ந்து 520 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
பிஎஸ்இ-யில் 38.11 லட்சம் பங்கு வர்த்தகமானது. என்எஸ்இயில் 2 கோடி பங்குகள் வர்த்தகமானது.
பொதுத்துறை நிறுவனமான கெயில், பிரிட்டிஷ் கேஸ், ஏசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் மற்றும் மஹாராஷ்டிரா அரசு ஆகியவை மகாநகர் கேஸ் நிறுவனத்தை தொடங்கின. நிறுவனம் பட்டியலிட்ட பிறகு மஹாராஷ்டிரா அரசின் 10 சதவீத பங்கு 530 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT