Published : 26 Sep 2016 10:55 AM
Last Updated : 26 Sep 2016 10:55 AM
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கூடுதல் செயலரை மத்திய அரசு நியமித் துள்ளது. அருண் கோயல் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் நிய மன அமைச்சரவைக் குழு கோயல் நியமனத்தை அறிவித்துள்ளது. மத் திய அரசு பணியாளர் திட்டத்தின்கீழ் இவரது நியமனம் இருக்கும்.
1985-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் அருண் கோயல், மத்திய அமைச்சரவை செயலகத்தில் திட்ட கண்காணிப்புக்குழுவின் கூடுதல் செயலராக உள்ளார். தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT