Published : 25 Sep 2016 12:16 PM
Last Updated : 25 Sep 2016 12:16 PM

இந்தியா, இந்தோனேசியா கூட்டுறவால் தேயிலை தொழில் மேம்படும்: இந்தோனேசிய அமைச்சர் நம்பிக்கை

தேயிலை உற்பத்தியில் இந்தியா மற்றும் இந்தோனேசியா முன்னி லை வகிப்பதால், இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தேயிலை தொழில் மேம்படும் என இந்தோனேசிய துணை அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 3 நாள் சர்வதேச தேயிலை கருத்தரங்கு நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய உணவு மற்றும் வேளாண் துணை அமைச்சர் முஸ்தாலிபா மக்மத் பங்கேற்று பேசியது: இந்தோனேசியாவில் 1877ம் ஆண்டு தேயிலை அறி முகமானது. மேற்கு ஜாவா மாகாணத்தில்தான் நாட்டின் 70 சதவீத தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தோனேசிய பொருளா தாரத்தில் தேயிலை துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 2011ம் ஆண்டு 1,54,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலையின் பரப்பளவு தற்போது 1,18,441 ஹெக்டேராக குறைந்துள்ளது.

தேயிலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒருங்கிணைந்து செயல்பட்டால் தேயிலை தொழில் மேம்படும்.

தேயிலை உற்பத்தி மட்டுமல்லாமல் நுகர்வையும் அதிகரிக்க வழி வகை செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் என்.தர்மராஜ், சிசிபிஏ தலைவர் அசாம் மேமன், தேயிலை வாரிய செயல் இயக்குநர் சி.பால்ராசு, சன்ஜித் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x