Published : 09 Dec 2013 06:22 PM
Last Updated : 09 Dec 2013 06:22 PM

உண்மையான மதிப்பை அடைந்தது ரூபாய்: அரவிந்த் மயாராம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு இப்போதுதான் அதன் உண்மை நிலையை அடைந்திருக்கிறது என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் அர்விந்த் மாயாராம் தெரிவித்தார்.

இன்று வர்த்தகத்தில் நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 51 காசுகள் முன்னேற்றமடைந்தது. இதனால் ஒ!ரு டாலருக்கு ரூ. 60.90 என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து நான்கு நாள்களாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு மாதங்களில் ரூபாயின் மாற்று மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும.

இப்போது உள்ள நிலையிலிருந்து மேலும் வீழ்ச்சியடைய அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ. 68.85 என்ற உச்சபட்ச வீழ்ச்சியை அடைந்தது. ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக ரிசர்வ் வங்கி, எடுத்த நடவடிக்கைகள் இப்போது பலனளிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) வர்த்தக வர்த்தக முடிவில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 28 பைசா உயர்ந்து ரூ.61.13 ஆக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x