Last Updated : 05 Sep, 2016 12:13 PM

 

Published : 05 Sep 2016 12:13 PM
Last Updated : 05 Sep 2016 12:13 PM

நடப்பு கணக்கு சராசரி இருப்புத் தொகை: அபராதத்தை அதிகரித்தது பஞ்சாப் நேஷனல் வங்கி

நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது கணக்கில் சராசரி இருப் புத் தொகையை வைக்காமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது

நடப்பு கணக்கு வைத்துள்ள வர்களின் மூன்று மாதங்களுக்கு சராசரி இருப்பு தொகையை வைக் காமல் இருந்தால் விதிக்கப்படும் அபராத தொகையை பஞ்சாப் நேஷ்னல் வங்கி உயர்த்தியுள்ளது. இது நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், பிஎன்பி ஸ்மார்ட் பேங்கிங் நடப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பொருந்தும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்மார்ட் பேங்கிங் நடப்பு கணக்கு மற்றும் `சில்வர்’ கணக்கு வைத் துள்ளவர்கள் சராசரியாக 1 லட்ச ரூபாயை இருப்புத் தொகை யாக கணக்கில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அபராத தொகை தற்போது 150 ரூபாயாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

`கோல்டு’ நடப்பு கணக்கு வைத் துள்ளவர்கள் 2 லட்ச ரூபாயை இருப்புத் தொகையாக கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராத தொகை ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை தற்போது 600 ரூபாயாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. `பிளாட்டினம்’ நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 10 லட்ச ரூபாயை இருப்புத் தொகையாக பராமரிக்க வேண் டும். இல்லையெனில் ரூ.4,000 அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x