Published : 16 Mar 2018 09:05 AM
Last Updated : 16 Mar 2018 09:05 AM

விக்ரம் கோத்தாரிக்கு ஜாமீன் மறுப்பு

ரோட்டோமேக் நிறுவனத்தின் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது. ரூ.3,695 கோடி அளவுக்கு வங்கியில் கடன் வாங்கி இருந்த இவர்கள் திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் இந்த கடனை செலுத்தாததால் இவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது.

முன்னதாக மார்ச் 7-ம் தேதி இடைக்கால ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட வழக்கிலும் இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பிப்ரவரி 23-ம் தேதி இவர்களை சிபிஐ கைது செய்தது. அதில் இருந்து தற்போது வரை சிறையில் இருக்கின்றனர். இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x