Published : 25 Apr 2019 07:39 PM
Last Updated : 25 Apr 2019 07:39 PM

டீசல் கார்கள் விற்பனையை நிறுத்துகிறது மாருதி

இந்தியாவின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி 2020 ஏப்ரல் முதல் தங்கள் டீசல் கார்கள் விற்பனையை முழுதும் நிறுத்த முடிவு செய்துள்ளது.  கரியமிலவாயு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறித்த புதிய விதிமுறைகளுக்கு ஆட்டோமொபைல் தொழிற்துறை மாறும் முகமாக இந்த முடிவை மாருதி எடுத்துள்ளதாக நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.

 

நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையில் டீசல் கார்களின் விற்பனை மட்டும் 23% பங்களிப்பு செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4.63 லட்சம் டீசல் வண்டிகளை மாருதி விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நிறுவனத்தின் விடாரா பிரெஸா மற்றும் எஸ்-கிராஸ் உள்ளிட்ட வண்டிகள் டீசல் இன்ஜின் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிஃப்ட், பலேனோ, டிசையர், சியஸ் மற்றும் எர்டிகா டீசல் மற்றும் பெட்ரோல் வடிவங்களாகும்.

 

அதே போல் தனது லைட் கமர்ஷியல் வாகனங்களான சூப்பர் கேரி போன்றவற்றையும் டீசல் என்பதால் மாருதி நிறுத்துகிறது. இது பெட்ரோல், சிஎன்ஜி பயன்பாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x