Published : 13 Oct 2018 08:23 AM
Last Updated : 13 Oct 2018 08:23 AM

சில்லரை பணவீக்கம் 3.77 %

நாட்டின் சில்லரை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.77 சதவீத மாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் 3.69 சத வீதமாக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் விலை உயர்வு காரணமாக சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடு கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீதமாக சரிந்துள்ளது.

சர்வதேச செலாவணி நிதியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி யில்,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நிதி சீர்திருத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது. 2018-19-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி எதிர் பார்ப்பு 7.3 சதவீதமாக இருக்கும் என்று செலாவணி நிதியம் கணிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

பணவீக்கம் தொடர்ச்சியாக அதி கரித்து வருவதற்கு ஏற்ப நிதிக் கொள்கைகளை மேலும் கடுமை யாக்க வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளது. சமீபத்தில் அர்ஜெண்டினா இதனை செயல்படுத்தியுள்ளது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்திக் கும். துருக்கியின் நாணய மதிப்பு இப்படியான சரிவினை கண்டது. இந்தியாவின் வளர்ச்சி போக்கு விரைவில் மேம்படும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தனது அரையாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு நிதிக் கொள்கை கூட்டங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள் ளது. எனினும் இந்த மாதம் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றும் முடிவினை எடுக்கவில்லை. இத னால் பணவீக்கம் தற்போதைய அளவிலேயே இருப்பதுடன், பண வீக்க எதிர்பார்ப்பு குறைவதற் கான வாய்ப்புகளும் உள்ளன.

இந்தியாவின் பணவீக்க எதிர் பார்ப்பு 2018-19 நிதியாண்டில் 4.7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x