Published : 16 Jun 2018 09:02 AM
Last Updated : 16 Jun 2018 09:02 AM

பங்குகளை திரும்ப வாங்க டிசிஎஸ் ஆலோசனை

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப் பட்டுள்ளது.

இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு இந்த வாரத் தொடக்கத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் நிறுவனத்தின் இயக்குநர் குழு பங்குகளை திரும்ப வாங்குவதற்கான முன்வரைவின் மீது ஆலோசனை செய்ய உள்ளது என குறிப்பிட்டுள்ளது. எனினும் பங்குகளை திரும்ப வாங்குவது குறித்து வேறு தகவல்களை டிசிஎஸ் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.16,000 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கியது. ஒரு பங்கு ரூ.2,850 என்கிற விலையில் 5.61 கோடி பங்குகளை திரும்ப வாங்கியது.

பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையில் 3.60 கோடி பங்குகளை திரும்ப வாங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் மொத்த பங்குகளில் 64.2 சதவீத பங்குகள் நிறுவனத்தின் வசம் இருக்கும். இந்த நடவடிக்கையில் பெரு முதலீட்டாளர்கள் இடம் பெற உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x