Published : 29 Apr 2018 08:38 AM
Last Updated : 29 Apr 2018 08:38 AM
2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும். அதே சமயத்தில் அடுத்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதனால் விரிவாக்கப் பணிகள் நடக்கும். பொருளாதார சூழல் முற்றிலும் சாதகமாக இருக்கிறது. தவிர பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த 47 மாதங்களாக எடுத்து வந்த சீர்த்திருத்த நடவடிக்கைகளை அரசு ஒருங்கிணைக்கத் திட்டமிட்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு உயர்ந்து வருகிறது. அதனால் 7.5 சதவீத வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம்.கடந்த 47 மாதங்களாக அரசு பல சீர்திருத்தங்களை எடுத்து வருகிறது. இன்னும் ஆட்சி முடிவதற்கு ஓர் ஆண்டு மட்டுமே இருக்கும் சூழலில் புதிதாக சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு பதிலாக ஏற்கெனவே செய்யப்பட்ட சீர்திருத்தங்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்யும் என ராஜீவ் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT