Published : 09 Jun 2023 05:49 PM
Last Updated : 09 Jun 2023 05:49 PM

சென்செக்ஸ் 223 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 223 புள்ளிகள் (0.35 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 62,625 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் (0.38 சதவீதம்) வீழ்ந்து 18,563 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:07 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 77.89 புள்ளிகள் உயர்வடைந்து 62,926.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 18,623.75 ஆக இருந்தது.

காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைதள், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை நோக்கிச் சென்றது. நாள்முழுவதும் நிலவிய நிலையற்ற வர்த்தகத்தின் பிற்பாதியில் பரந்த அளவிலான விற்பனை அழுத்தத்தின் காராணமாக இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 223.01 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 62,625.63 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.10 புள்ளிகள் வீழ்ந்து 18,563.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்திருந்தன. டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், டிசிஎஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x