Published : 08 Jun 2023 07:29 PM
Last Updated : 08 Jun 2023 07:29 PM

சென்செக்ஸ் 294 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 294 புள்ளிகள் (0.47 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 62,848 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் (0.49 சதவீதம்) வீழ்ந்து 18,634 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 136.60 புள்ளிகள் உயர்வடைந்து 63,279.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22.55 புள்ளிகள் உயர்ந்து 18,748.95 ஆக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று இன்று அறிவித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் எஃப் அண்ட் ஓ பங்குகளின் வாரந்திர காலாவதி, முதலீட்டாளர்களின் லாபம் நோக்கிய நகர்வின் விற்பனை அழுத்தம் போன்ற காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் நான்கு நாள் லாபத்திற்கு முற்றுபுள்ளி வைத்து இன்று வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 294.32 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 62,848.64 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91.90 புள்ளிகள் வீழ்ந்து 18,634.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன. கோடாக் மகேந்திரா பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x