Published : 04 May 2016 09:11 AM
Last Updated : 04 May 2016 09:11 AM

காப்பிராயன் கவிதை- கருத்துக் கணிப்பு கோஷ்டி

கருத்துக் கணிப்பு கோஷ்டி இப்போ
காத்தை அளக்குது
ஜெயிக்கப் போறதாருன்னு
பீதி கெளப்புது!

எலெக் ஷன் வந்தா
ஜோசியனா எல்லாம் மாறுவான்
பர்சண்டேஜு கணக்குப் போட்டு
ஜோக்கு பண்ணுவான்!

ஆளுக்கொரு ஆசையத்தான்
தினமும் சொல்லுவான்
தமிழ்நாட்டு ஜனங்களதான்
கொழப்பிக் கொல்லுவான்!

எந்தக் கட்சி ஜெயிக்குமுன்னு
யாருக்குத் தெரியும்..?
தெரிஞ்சிருந்தா கட்சிங்க ஏன்
ரூபாயை எறியும்..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x