Published : 27 Apr 2020 03:13 PM
Last Updated : 27 Apr 2020 03:13 PM

மூலம், பூராடம், உத்திராடம் (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -
கடுமையாகப் போராடி வெற்றி பெற வேண்டிய வாரம்.
முயற்சிகளில் ஒரு சில தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். மன உறுதியுடன் எதிர்கொண்டால் மிக எளிதாக வெற்றியைக் காணலாம்.
அலுவலகப் பணிகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத புதிய பொறுப்புகள் கிடைப்பதால் மன அழுத்தம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாக இருக்கும். அரசு வழி தொந்தரவுகள் ஏற்படும்.
சமூகத்தில் பெரிய மனிதரின் உதவியோடு இந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் இருக்கலாம். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
எதிர்பார்த்த உதவிகள் கடைசி நேரத்தில் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் உதவிகளை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
இந்த வாரம் -

திங்கள்-
எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். மனைவிவழி உறவுகளால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
பொறுமை காக்க வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது. குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த தவறுகளை சரிசெய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபம் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

வியாழன்-
வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேலை தொடர்பாக ஒரு சில சலுகைகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். மனநிம்மதி ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்க முற்படுவீர்கள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும்.

சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்.

ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணத்தை கடுமை காட்டி வசூலிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். செய்தொழிலில் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உற்பத்திப் பொருட்களை விற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
**************************************


பூராடம் -
இந்த வாரம் அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.
பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். ஒரு சில தடைகள் இருந்தாலும் அந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கும்.
வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும்.புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்து தொடர்பாக சகோதரர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள்-
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன்-
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தினரிடம் கூட சுமுகமாக இருப்பது நல்லது.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடனுதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக ஒரு சில அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் விலகுவதற்கு ஒரு சில உதவிகள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும் வாய்ப்பு உள்ளது.

சனி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

ஞாயிறு-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். கருத்துக்களை பகிரும் பொழுது அதன் உண்மைத் தன்மையை அறிந்து பகிர வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ அனுமன் வழிபாடு செய்யுங்கள் அனுமன் சாலீசா கேளுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
***********************************


உத்திராடம் -
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்வீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.
இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்கள் சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவார்கள். ஒரு சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

செவ்வாய்-
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படும். மனம் இயல்பாக இருக்காது. ஒருவித பதட்டத்துடன் படபடப்பாகவும் இருப்பீர்கள்.

புதன்-
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். சகோதரர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

வியாழன்-
நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி-
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
தேவைகள் உடனுக்குடன் நிறைவேறும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்ட இருந்த மனவருத்தங்கள் அகலும்.

ஞாயிறு-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். மனக்குறைகள் அனைத்தும் தீரும். எதிர்பார்த்த ஒருசில பணத்தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா அன்னையை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x