Published : 27 Apr 2020 01:57 PM
Last Updated : 27 Apr 2020 01:57 PM

விசாகம், அனுஷம், கேட்டை (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -
நன்மைகள் நடைபெறும் வாரம்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ளுங்கள்.
தகுந்த மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள். தாயாரின் உடல்நலத்தில் அதிக அக்கறையும் கவனத்தையும் செலுத்துங்கள்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும்.
வியாபாரத்தில் சுறுசுறுப்பு உண்டாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். லாபம் இருமடங்காக இருக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
மாணவர்கள் தங்கள் திறமைகள் வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வெளிநாடு அல்லது வெளியூரில் வசிக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் நல்ல தகவல்களும் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் நம்பிக்கை உண்டாகும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
புதிய தொழில் வாய்ப்புகள் பற்றிய சிந்தனை தோன்றும். வேலை தொடர்பாக வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தி ஆகும். சகோதரர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து தருவீர்கள். தூரத்து உறவினர் உதவி கேட்பார். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இந்த சாதகமான தகவல் கிடைக்கும்.

புதன்-
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். மனதில் உற்சாகம் கொப்பளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். திருமண முயற்சிகளில் முன்னேற்றமும் ஏற்படும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் தொடர்பான நல்ல செய்தி உறுதியாகும்.

வியாழன்-
வெளியிடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம், தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். மனதில் சஞ்சலம் உண்டாகும். குடும்பத்தாரிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பாக இருங்கள்.

வெள்ளி-
வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வகையில் நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களோடு சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக பணியாற்றுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பணி தொடர்பான சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தார் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும், பாக்கிகள் வசூலாகும்.

ஞாயிறு-
குடும்பத்தாருடன் நேரத்தை செலவழியுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரணையாக இருங்கள். செலவுகள் அதிகம் ஆனாலும் கவலைப் படாமல் இருக்க வேண்டும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
கந்த சஷ்டி கவசம் படியுங்கள். மன நிம்மதி கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.
*************************************

அனுஷம் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம்.
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுங்கள் அவர்களின் குறைகளை காது கொடுத்து கேளுங்கள். குடும்பத்தாருடன் அலட்சியமாக பேசுவது கூடாது. குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டவேண்டும். ஒரு சில குடும்பப் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது,
எனவே குடும்பத்தாருடன் இணக்கமாக இருந்தால் குடும்பத்தில் எந்த பிரச்சினையிலும் வருவதற்கு வாய்ப்பில்லை. வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒரு சில பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கணவருடன் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதைப் பேசினாலும் நிதானமாகப் பேச வேண்டும். உறவினர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும் ஆடம்பர நாட்டம் ஏற்படும். எனவே கவனமாக இருங்கள். கலைத்துறையினருக்கு நண்பர்களின் உதவியால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். இந்த நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். அலுவலக வேலைகளில் இயல்பை விட வேகமாக பணியாற்றுவீர்கள்.

செவ்வாய்-
வேண்டிய உதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.

புதன்-
மனதில் உற்சாகமும் அதேசமயம் பதட்டமும் இருக்கும். இன்றைய செயல்கள் அனைத்தையும் பரபரப்பாகவே செய்து முடிப்பீர்கள் பதட்டத்தையும் பரபரப்பையும் குறைத்துக்கொள்ளுங்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். குடும்பத்தினர்களிடம் எரிந்து விழுவீர்கள் அதை தவிர்க்க வேண்டும்.

வியாழன்-
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அனைத்தையும் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதரர்களிடம் ஏற்பட்ட மன வருத்தத்தை பேசி சரி செய்வீர்கள்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகளில் தடை தாமதங்கள் வரும். விரக்தியான மனப்பாங்கு இருக்கும். எரிச்சலும் கோபமும் வெளிப்படும். அக்கம்பக்கத்தினருடன் சமரசமாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் இன்று கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். வியாபார விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு-
எதிர்பாராத பண வரவு ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். பெண்களுக்கு சகோதர வழியிலிருந்து ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவ தரிசனம் செய்யுங்கள். நமசிவாய மந்திரத்தை இடைவிடாது உச்சரியுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*************************


கேட்டை -
நன்மைகள் நடைபெறும் வாரம். பணவரவு தாராளமாக இருக்கும்.
நினைத்ததை நினைத்தபடியே செய்து காட்டக் கூடிய வாரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும்.
சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பேசி தீர்க்கப்படும். தொழில் அல்லது வியாபாரம் அல்லது குடும்ப விஷயமாகவே இருந்தாலும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகும்.
வழக்கு ஏதேனும் இருந்தால் தள்ளி வையுங்கள். அலுவலகப் பிரச்சினைகளை பெரிதாக்காமல் முடிந்தவரை நீங்கள் அலுவலக விதிகளுக்கு கட்டுப்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் அரசு வழியில் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் புதிதாக கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
மன சஞ்சலம் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருக்க வேண்டும் கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எந்த அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.


புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த தவறுகளை இன்று சரி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன்-
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தை தரும் எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் பண உதவியும் கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் சரளமாக இருக்கும் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் தூரத்து உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களுக்கும் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.


வெள்ளி-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி அவதூறுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மன நிம்மதி அடையும் நாள். தொழில் தொடர்பாக அரசு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.


சனி-
எடுத்துக்கொண்ட வேலைகளை மிகச் சரியாக திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள் பணவரவு தாராளமாக இருக்கும்.வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் கடன் பிரச்சினைகளில் சமரசம் ஏற்பட்டு ஒரு சில கடன்களை அடைக்கும் வாய்ப்பு உள்ளது குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பமான மனநிலை தீரும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். வீட்டு பராமரிப்புகளை நீங்களே முன்னின்று செய்வீர்கள். நண்பர்களிடம் இருந்து சாதகமான தகவல் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். ஆரோக்கியம் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். மன நிம்மதி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x