Published : 14 Mar 2015 09:51 AM
Last Updated : 14 Mar 2015 09:51 AM

8-வது மாடியிலிருந்து விழுந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பலி

சென்னை பெருங்குடியில் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்த இளம் இன்ஜினீயர் பலியானார்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை யைச் சேர்ந்தவர் வேலாண்டி. இவரது மகன் அரவிந்த்(25). சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து அரவிந்த் கீழே விழுந்து கிடந்தார். ரத்த வெள்ளத்தில் இருந்தவரை சக ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக் குக் கொண்டு சென்றனர். பரிசோதித் துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற் கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித் தனர். இச்சம்பவம் தொடர்பாக துரைப் பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலையா, கொலையா என்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x