Published : 11 Feb 2015 12:15 PM
Last Updated : 11 Feb 2015 12:15 PM

நீங்களே செய்யலாம்: காகித தலையணை

மென்மையான தலையணையில் தலைவைத்துத் தூங்கினால்தான் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அப்படியான ஒரு மென்மையான தலையணையைச் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

# இரண்டு காகித நாப்கின்கள்

# வண்ணக் காகிதத்தால் ஆன நீண்ட பட்டை ஒன்று

# பஞ்சு

# பசை

# ஸ்கெட்ச் பேனா.

செய்முறை:

1 இரண்டு காகித நாப்கின்களையும் ஒன்றின் மீது ஒன்றை வைத்து மூன்று பக்கங்களையும் பசை கொண்டு ஒட்டிவிடுங்கள். ஒரு பக்கத்தை மட்டும் ஒட்டாமல் விட்டுவிடுங்கள்.

2 காகித நாப்கினின் வெளிப்பக்கங்களில் கண்களுக்கு அழகான மலர் போன்ற வடிவங்களை வரைந்துகொள்ளுங்கள்.

3 இப்போது திறந்து வைக்கப்பட்டிருக்கும் பக்கம் வழியாகப் பஞ்சைத் திணித்துக்கொள்ளுங்கள். போதுமான அளவு பஞ்சைத் திணித்ததும் அந்தப் பக்கத்தை ஒட்டிவிடுங்கள்.

4 வண்ணக் காகிதத்தால் ஆன பட்டையை லேஸ் போல வெட்டி எடுத்துக்கொண்டு, அதைப் படத்தில் காட்டியுள்ளபடி காகித நாப்கினின் அனைத்துப் பக்கங்களின் ஓரங்களையும் சுற்றி ஒட்டிவிடுங்கள்.

இப்போது அழகான தலையணை கிடைத்துவிட்டதா? அதில் தூங்கி சுகமான கனவுகளைக் காணுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x