மியான்மரில் தாக்குதலுக்குப் பயந்து சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். சுமார் 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காக்ஸ் பஜார் பகுதியில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு செஞ்சிலுவைச் சங்க லாரி ஒன்று நேற்று மலைபிரதேசமான பந்தர்பன் பகுதிக்கு சென்றது.
அப்போது காக்ஸ் பஜார் பகுதிக்கு 50 கி.மீ. தூரத்துக்கு முன்பாக டிரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் நிவாரணப் பொருட்களை டிரக்கில் ஏற்றி இறக்க தினக் கூலிக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளிகள் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்..- பிடிஐ
முக்கிய செய்திகள்
கல்வி
31 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago