ஆப்கனின் முக்கிய நகரை கைப்பற்ற தலிபான்கள் முயற்சி

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரைக் கைப்பற்ற தலிபான்கள் தீவிர போரில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குந்தூஸ் நகரம் தலிபான்களின் வசம் இருந்தது. அதனை கடந்த 2015 செப்டம்பரில் அரசுப் படைகள் மீட்டன. அந்த நகரை மீண்டும் கைப்பற்ற தலிபான்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நகரின் 4 புறமும் தலிபான்கள் திடீர் தாக்குதலைத் தொடங்கினர். அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களது வீரர்கள் குந்தூஸ் நகருக்குள் நுழைந்துவிட்டனர். விரைவில் நகரம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குந்தூஸ் நகரைச் சுற்றி வளைத்துள்ள தலிபான்களை விரட்டியடிக்க கடுமையாகப் போரிட்டு வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

33 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்