கொலம்பியாவில் கடந்த25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் டைரோ அன்டோனியோ உசுகா (50). இவர் ஒட்டோனெயில் என்றே பரவலாக அறியப்படுகிறார். தனது இளம் வயதில், கொலம்பியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர், 1990-களில் கிளர்ச்சிப் படைகள் அரசால் ஒடுக்கப்பட்டன.
இதையடுத்து, அன்டோனியாவுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஈடுபட்டது. தொடக்கத்தில், மிகச்சிறிய அளவிலான போதைப்பொருட்களை கைமாற்றி வந்த அன்டோனியா, ஒருகட்டத்தில் சர்வதேச அளவில் போதைப்பொருட்களை கடத்தும் அளவுக்கு சென்றார். 'கல்ஃப் க்ளான்' என அழைக்கப்படும் அவரது குழு 2005-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலாக உருவெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த2017-ம் ஆண்டு முதல் அன்டோனியோவை கைது செய்யும் ஆபரேஷனில் கொலம்பியா அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதற்கு அமெரிக்க உளவுத்துறையும் உதவியது. அவரை பிடிப்பதற்காக சுமார் 5 ஆயிரம் வீரர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
இந்த சூழலில்தான், கொலம்பியா - பனாமா நாட்டு எல்லைப் பகுதியான நெக்கோக்லி வனப்பகுதியில் அன்டோனியோ பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில், 22 ஹெலிகாப்டர்களுடன் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுரங்கம் ஒன்றில் மறைந்திருந்த அவரை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகஅரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 mins ago
விளையாட்டு
10 mins ago
இந்தியா
14 mins ago
உலகம்
21 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago