நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெஃபான் கூறும்போது, “என்னைப் பிரதமர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு சபாநாயகரைக் கேட்டுக்கொள்கிறேன். கரோனா சூழலில் சுவீடனில் மீண்டும் தேர்தலை நடத்த முடியாது. எனவே, நான் ராஜினாமா செய்கிறேன்” என்றார்.
63 வயதான ஸ்டெஃபான் 2014ஆம் ஆண்டு சுவீடன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று சுவீடன் பிரதமரானார். எனினும் பிற கட்சிகளின் ஆதரவுடனே இம்முறை ஆட்சி அமைத்தார்.
இந்த நிலையில், ஸ்டெஃபான் தலைமையிலான அரசு மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவு விலக்கப்பட்டு வந்தது. மேலும், கடந்த வாரம் சுவீடன் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டால் ஒன்று மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் அல்லது பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து தற்போது தனது பதவியை ஸ்டெஃபான் ராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து சுவீடனுக்குப் புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார். சுவீடனில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago