ஈரானில் ஒரே நாளில் 25,492 பேர் கரோனாவால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 25,492 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 25,492 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 18 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஈரானில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அந்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்