பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; பலி எண்ணிக்கை 2,815

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,815 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால்,பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதேபோன்று பிரேசில் நாடும் அதிக கரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது. அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 90,570 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டில் 2,815 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் பிரேசிலில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்து 71 ஆயிரத்து 390 ஆக உயர்வடைந்து உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 314 ஆக உயர்ந்து உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்