கரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய ஆதரவு: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸுக்கு எதிராக உலக அளவில் ஆதரவளித்த இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது பாராட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸுக்கு எதிராக உலகளாவிய ஆதரவு அளித்த இந்தியா மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நம் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே கரோனா வைரஸைத் தடுக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9.8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

கரோனா தடுப்பு மருந்து பல நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்