தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “ தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,740 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் 8 ஆம் தேதியிலிருந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் கடந்த சில நாட்களாகவே 1000 பேர்வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது என்பதைச் சார்ந்து தென்கொரியாவில் தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 mins ago
விளையாட்டு
20 mins ago
இந்தியா
24 mins ago
உலகம்
31 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago