ஆஸ்திரியாவில் சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 2,435 பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“ஆஸ்திரியாவில் சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,435 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,844 ஆக அதிகரித்துள்ளது. 53,970 பேர் குணமடைந்துள்ளனர். 941 பேர் பலியாகி உள்ளனர்” என்று ஆஸ்திரிய சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முதலே ஆஸ்திரியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்
இந்த நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
க்ரைம்
10 mins ago
சுற்றுச்சூழல்
46 mins ago
க்ரைம்
50 mins ago
இந்தியா
48 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago