நேபாளத்தில் கரோனா பாதிப்பு: 61,593 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நேபாளத்தில் புதிதாக 2020 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

''ஆறு மாதங்களாக நேபாளத்தில் அமலில் இருந்த ஊரடங்குக்கு வியாழக்கிழமை முதல் விலக்கு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2020 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நேபாளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,593 ஆக அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் நேற்று மட்டும் 11,000க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது'' என்று நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கரோனாவிலிருந்து 43,820 பேர் குணமடைந்துள்ளனர். 390 பேர் பலியாகி உள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்