கரோனா: ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களுக்குப் பிறகு உயிரிழப்பு இல்லை

By செய்திப்பிரிவு

கடந்த இரு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இன்று கரோனா தொற்றுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தரப்பில், “இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் 50 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் கரோனா பாதிப்பு குறைந்தாலும் மெல்போர்னிலும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான விக்டோரியாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 26,738 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,647 பேர் குணமடைந்துள்ளனர். 816 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

35 mins ago

க்ரைம்

39 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்