பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழியில் கரோனா தொற்று இருந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் உள்ள ஷென்சென் நகருக்கு பிரேசிலிருந்து கோழி இறைச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையில் இறைச்சிகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதில் கரோனா தொற்று உறுதிப்படுத்தட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஷென்சென் நகர அரசு தெரிவித்துள்ளது.
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 90% பேர் நுரையீரல் பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
வாழ்வியல்
23 mins ago
தமிழகம்
39 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago