நியூசிலாந்தில் புதிதாக 13 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை செயலாளர் ஆஷ்லி கூறும்போது, “நியூசிலாந்தில் புதன்கிழமை 13 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் கரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 36 பேருக்கு நியூசிலாந்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்துத் தெரிவித்தது.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அங்கு கரோனா பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
உலகம்
16 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago