பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 2,076 பேருக்கு கரோனா உறுதி: தொற்று 61,227 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,075 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,076 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 61,227 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கரோனா தொற்றினால் பஞ்சாப், சிந்து மாகணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சிந்து மாகாணத்தில் 22, 037 பேருக்கும் , பஞ்சாப் மாகாணத்தில் 8, 483 பேருக்கும் கரோனா தொறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கரோனா தொற்றிலிருந்து 20, 231 பேர் குணமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 5,08,806 பேருக்கு கரோனா தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார். ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சில வாரங்களுக்கு முன்னர் தளர்த்தியது.

பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

21 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்