பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,075 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,076 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 61,227 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கரோனா தொற்றினால் பஞ்சாப், சிந்து மாகணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சிந்து மாகாணத்தில் 22, 037 பேருக்கும் , பஞ்சாப் மாகாணத்தில் 8, 483 பேருக்கும் கரோனா தொறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கரோனா தொற்றிலிருந்து 20, 231 பேர் குணமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 5,08,806 பேருக்கு கரோனா தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார். ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சில வாரங்களுக்கு முன்னர் தளர்த்தியது.
பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
சினிமா
21 mins ago
சுற்றுச்சூழல்
44 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
4 hours ago
வலைஞர் பக்கம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
5 hours ago