அமெரிக்காவை விடாது துரத்தும் கரோனா: பலி எண்ணிக்கை 70,646 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70, 646 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 12, 01,337பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு கரோனா தொற்றுக்கு 70, 646 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இதில் நியூயார்க்கில் மட்டும் அதிகப்பட்சமாக 3,21,192 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். நியூயார்க்கை அடுத்து நியூ ஜெர்சியில் 130,593 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,244 பேர் பலியாகி உள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 2,000 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா-வியட்நாம் இடையான போரில் இறந்த அமெரிக்கர்களை விட தற்போது கரோனாவால் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கரோனா வைரஸால் அமெரிக்கா கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்