நியூயார்க்கில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 10,000 கடந்தது

By செய்திப்பிரிவு

நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 -ஐ கடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கரோனா வைரசின் மையமாக உள்ளது. நியூயார்க்கில் பரவி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அந்த மாகாண அரசு ஈடுபட்டுள்ளது.

நியூயார்க்கில் மட்டும், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்பு 10,000-ஐ கடந்து இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ நியூயார்க்கில் பரிசோதனை செய்யப்படாத நிலையில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளானமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ்ஸுக்கு நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்தி 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

கல்வி

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்