நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 -ஐ கடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கரோனா வைரசின் மையமாக உள்ளது. நியூயார்க்கில் பரவி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அந்த மாகாண அரசு ஈடுபட்டுள்ளது.
நியூயார்க்கில் மட்டும், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்பு 10,000-ஐ கடந்து இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ நியூயார்க்கில் பரிசோதனை செய்யப்படாத நிலையில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளானமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ்ஸுக்கு நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்தி 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago
கல்வி
7 hours ago
இந்தியா
6 hours ago