கரோனா தொற்று பாதிப்பு: முக்கிய நகரங்களில் ஊரடங்கை அறிவித்த சவுதி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக 24 மணிநேரத்திற்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை சவுதி விதித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் தரப்பில், “சவுதியில் கரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 24 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கியமான வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் இதுவரை கரோனா வைரஸுக்கு 2,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸைத் தடுக்கும் பணியில் சவுதி அரசு ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் 11,000 -ஐக் கடந்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் 3,67,629 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்