இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு உயர் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் ஊடகங்கள், “இஸ்ரேலில் சுகாதாரத் துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், லிட்ஸ்மனின் மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது”. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நிர்வாக நடவடிக்கைகளில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இதனால் அங்கு உயர் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் கரோனா வைரஸுக்கு 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் பலியாகினர் .
இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
29 mins ago
விளையாட்டு
47 mins ago
விளையாட்டு
49 mins ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
56 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago