ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 149 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் காய்ச்சலுக்கு 149 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கோவிட் -19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,284 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிருந்து விடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தற்போதைய தகவலின் படி சுமார் 2 லட்சம் பேர் கோவிட் - 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9,000 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
க்ரைம்
1 min ago
இந்தியா
7 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago