இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

By செய்திப்பிரிவு

இராக்கில் உள்ள கிர்குக் மாகாணத்தில் அமெரிக்கத் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்கும் மாகாணத்தில் அமெரிக்கத் துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் இராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் சில நாட்களுக்கு முன்னர் பேரணி சென்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் மற்றும் அங்குள்ள அமெரிக்க விமானத் தளம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இராக்கில் அமெரிக்கத் துருப்புகள் உள்ள இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த மாதத் தொடக்கத்தில் இராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் . இதில் இராக்கில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அமெரிக்கவின் மீதும் அதன் படைகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவீடாதீர்!

பெண்களின் போட்டிகளுக்குள் குளிர்காயும் ஆண்கள்

சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கிறது

சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு 75% மானியம்; உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டம்: வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்