கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்களாக அரப் மோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அரப் மோய் மறைவுக்கு கென்ய அதிபர் உகுரு கென்யட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ நமது அரசும் நமது கண்டமும் மறைந்த டேனியல் அரப் மோய்யால் ஆசிர்வதிக்கப்பட்டன. அவர் வாழ்நாள் முழுவதும் கென்யாவுக்காக சேவை புரிந்தார்” என்றார்.
கென்யாவின் அதிபராக 1978 ஆம் ஆண்டு பதவி ஏற்ற அரப் மோய் 2002 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். மோய் தனது ஆட்சிக் காலத்தில் கென்யாவில் வறுமை அதிகரித்தற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
சினிமா
17 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
11 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
25 mins ago
வலைஞர் பக்கம்
29 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
39 mins ago
இந்தியா
47 mins ago
க்ரைம்
44 mins ago