சவுதி படையின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி கூட்டுப் படைகளின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஹெலிகாப்டரின் இரு ஓட்டுநர்களும் பலியானார்கள்”என்று தெரிவித்தனர்.
ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து சவுதி தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டனர்.
ஏமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago