அமெரிக்கா எங்களை குற்றம் சுமத்துவதால் ஏமனில் நடக்கும் போர் நின்றுவிடாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி தீயை அணைத்தனர். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஏமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் காரணமாக கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் அளவு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதியின் எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் பின்னணியில் ஈராம் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த நிலையில் சவுதி எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் ஈரான் இல்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா எல்லாவற்றுக்கும் எங்களை குற்றம் சுமத்துவதால் ஏமனில் நடக்கும் போர் நின்றுவிடாது. எங்கள் மீது அளித்த அதிகப்படியான அழுத்தம் தோல்வி அடைந்ததால், எங்கள் மீது இம்மாதிரியான பொய்களை அமெரிக்கா சுமத்தியுள்ளது. ஈரானை குறை கூறுவதால் அங்கு நடக்கும் பேரழிவுகள் முடிவுக்கு வராது”என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
கருத்துப் பேழை
22 mins ago
இந்தியா
28 mins ago
விளையாட்டு
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
34 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
சினிமா
2 hours ago