மியான்மர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மியான்மரில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''மியான்மரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மான் மாகாணத்தின் ப்யார் கோன் கிராமத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. மான் மாகாணத்திலிருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக மான் மற்றும் பகோ மாகாணத்தில் 30 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரில் வெள்ளப் பெருக்கு காரணமாக 89 ஆயிரம் மக்கள் தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்