ஜப்பானின் நாகசாகி நகரில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் உயிர்தப்பிய தபால்காரர் சுமித்ரு தானிகுச்சி 88 வயதில் நேற்று காலமானார்.
இரண்டாம் உலகப்போரின்போது கடந்த 1945 ஆகஸ்ட் 9-ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகர் மீது ‘ஃபேட்மேன்’ என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்த குண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சுமித்ரு தானிகுச்சி சைக்கிளில் தபால்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 16.
அணுகுண்டு வெடித்த சத்தத்தை கேட்ட அவர் தரையில் படுத்துக் கொண்டார். இருப்பினும் அணுகுண்டின் வெப்பத்தால் அவரது உடல் முழுவதும் தோல் உரிந்து கொப்பளங்கள் வெடித்தன. சுமார் 4 ஆண்டுகள் அவர் மருத்துவமனையில் கிசிச்சை பெற்றார். 16 முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 1949-ம் ஆண்டில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தான் செல்லும் இடமெல்லாமல் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட தனது உடலை காண்பித்து அதன் கொடூரத்தை மக்களுக்கு விளக்கினார். சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்ட அவர் நாகசாகி நகரில் நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
39 mins ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வேலை வாய்ப்பு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
கல்வி
10 hours ago