ஜெர்மனியின் மூனிச் நகரில் 1972 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விளையாட்டுக் குழுக்கள் ஒலிம்பிக் கிராமம் எனும் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
செப்டம்பர் 5 - அன்று பலவிதங் களிலும் ஒரு கருப்பு தினமாக விடிந்தது. உண்மையில் அது விடியாத நேரம் - காலை நான்கு மணி.
ஒலிம்பிக் கிராமத்தின் வேலியைத் தாண்டி உள்ளே நுழைந்தனர் ப்ளாக் செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த சிலர். அவர்கள் மனதில் வன்மமும் கைகளில் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்திருந்தன.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பதை அரசியல் இயக்கமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் யாசர் அராபத். ஆனால் அதன் வன்முறைக் கிளையாக (அதாவது வெளிப்படையான வன்முறை!) செயல்பட்டுக் கொண்டிருந்தது ப்ளாக் செப்டம்பர் அமைப்பு.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாகப் பிரிந்து ஒலிம்பிக் கிராமத்தின் இரண்டு பகுதிகளை நோக்கி விரைந்தனர்.
ஒரு பகுதி அங்கிருந்த ஆறு இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்களை வளைத்துப் பிடித்தது. இன்னொரு பகுதி ஐந்து இஸ்ரேலிய விளை யாட்டு வீரர்களை தங்கள் வசம் கொண்டு வந்தது. இவர்கள் மல்யுத் தம் மற்றும் பளுதூக்கும் பிரிவு களில் சிறப்புத் தகுதி பெற்றவர்கள்.
ஆக இந்தப் பதினொரு பேரையும் பணயக் கைதிகளாக்கி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
ஆனால் வளைக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் முரண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். பதிலுக்கு தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். இவர்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் தீவிர வாதிகள். இதில் யோசப் ரொமானோ என்ற விளையாட்டு வீரரும், மோஷே வெயின்பெர்க் என்ற பயிற்சியாளரும் இறந்தனர். அதற்குப் பிறகு மீதி ஒன்பது பேரும் அடங்கிப் போயினர்.
தீவிரவாதிகளின் முதல் நோக்கம் உடனடியாக நிறைவேறி யது. உலக நாடுகளின் கவனம் முழுமையாக அரபு- இஸ்ரேல் போராட்டத்தின்புறம் தீவிரமாகத் திரும்பியது. ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் ஒரு நாளுக்கு ரத்து செய்யப்பட்டன. என்றாலும் உலக நாடுகளின் ஒளிப் பதிவுப் பிரதிநிதிகள் அத்தனை பேரின் கவனமும் மைதானங்களை விட்டு ஒலிம்பிக் கிராமத்தை மையம் கொள்ளத் தொடங்கியது.
பாலஸ்தீனர்கள் உற்சாகம் கொண்டனர். ஆனால் கூடவே கொஞ்சம் கவலையும் வந்தது. பணயக் கைதிகளை வைத்துக் கொண்டு போதிய ஆதாயங்களை அடைய வேண்டுமே!
முதல் கட்டளையாக இஸ்ரே லியச் சிறைச்சாலைகளில் உள்ள 234 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றான் ‘இஸ்ஸா’. இவன்தான் அந்தத் தீவிரவாதக் குழுவின் தலைவன். ஆனால் ‘உடனடியாக விடுதலை’ என்பது வாயளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் செயலள வில் நடக்கக் காணோம். அன்று மாலையே ‘நாங்களும் பணயக் கைதிகளும் மத்திய கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்’ என்றான் இஸ்ஸா.
வேறு வழியில்லாமல் ஜெர்மன் அதிகாரிகள் இதை ஏற்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து மூனிச் வந்துள்ள விளையாட்டு வீரர்களின் நலனுக்கு அவர்கள்தானே பொறுப்பு.
கெய்ரோவுக்கு தீவிரவாதி களையும், பணயக் கைதிகளையும் ஏற்றிச் செல்ல ஒரு தனி போயிங் 727 விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானநிலை யத்தில் ஒரு சாகச நாடகத்தை அரங்கேற்றி பணயக்கைதிகளை விடுவித்து விடலாம் என்று திட்ட மிட்டது ஜெர்மனி. இந்தத் திட்டத்தில் பங்கேற்க இஸ்ரேலின் உளவு நிறுவனம் மொஸாத் தனது முக்கிய அதிகாரிகளை அங்கு அனுப்பியது.
ஆனால் பலரும் எதிர்பாராத விதமாக ஜெர்மனி உளவு மற்றும் காவல் துறைகள் சொதப்பின. ‘‘சாகச ஏற்பாடுகள் மட்டரகமாக இருந்தன. அந்தப் பகுதியே இருளாக இருந்தது. அதே சமயம் நிழல் மறைவில் எந்தவித ஆயுத வண்டிகளும் நிறுத்தப்படவில்லை. மொத்தத்தில் இந்த விஷயத்தில் ஜெர்மானியர்கள் மிகவும் வேஸ்ட்’ என்று பின்னர் கருத்து தெரிவித்தார் இஸ்ரேலிய உளவுத் துறையின் தலைவர் ஜெமீர்.
பணயக் கைதிகளோடு தீவிர வாதிகள் இரவு 10.40க்கு விமான நிலையத்தை அடைந்தனர். அடைந்த உடனேயே தங்களை வளைத்துப் பிடிக்க பொறி வைக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான் இஸ்ஸா. எனவே ஜெர்மானியக் காவலர்கள் சுடத் தொடங்கிய அடுத்த கணமே பாலஸ்தீன தீவிரவாதிகள் பதிலுக் குச் சுடத் தொடங்கினர்.
நான்கு பணயக் கைதிகள் இருந்த ஒரு ஹெலிகாப்டரை நோக்கி வெடிகுண்டு ஒன்றை வீசினான் ஒரு தீவிரவாதி. ஹெலிகாப்டர் பற்றி எரிந்தது. உள்ளே இருந்தவர் களின் தொடர் மரணக் கூக் குரல்கள் விமான நிலையத்தை நிறைத்தன. மீதி இஸ்ரேலியர்கள் மிரட்டி வைக்கப்பட்டிருந்த ஹெலி காப்டர் மீது மற்றொரு தீவிர வாதி தன் பங்குக்கு ஒரு வெடிகுண்டை வீசினான். ஜெர்மனி காவல்துறையினர் தீவிரவாதிகளை நோக்கி சுடத் தொடங்கினர். கொஞ்ச நேரத்திலேயே 9 இஸ்ரேலியர் கள், 5 பாலஸ்தீனர்கள் மற்றும் 1 ஜெர்மன் போலீஸ் அதிகாரி ஆகியோர் இறந்தனர்.
உலக நாடுகள் (பெரும்பாலான அரபு நாடுகள் நீங்கலாக) தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்தன. இஸ்ரேலைப் பொருத்தவரை ஹிட்லருக்கு அடுத்தபடியாக தங்கள் இனத்தை வேரறுக்க முயற்சி செய்யும் சக்தியாக யாசர் அராபத் தோற்ற மளிக்கத் தொடங்கினார்.
அப்போதைய இஸ்ரேலியப் பிரதமரான கோல்டா மேயர் எடுத்த சில முடிவுகள் புதிய, அதிபயங் கரமான விளைவுகளுக்கு அடிகோலின. பாலஸ்தீன ராணுவப் பகுதிகளின்மீது குண்டு வீசியது இஸ்ரேலின் போர் விமானங்கள். இதில் அப்பாவிப் பொதுமக்களும் இறந்தனர்.
தீவிரப் பிரச்சாரத்துக்குப் பிறகு பல முஸ்லிம் இளைஞர்கள் பாலஸ் தீன விடுதலைப் போராட்ட அமைப் பில் உறுப்பினர்கள் ஆனார்கள்.
மூனிச் படுகொலைகளுக்கு யார் காரணம் என்பதைக் கண்டு பிடித்துத் தண்டிக்க ஒரு செயல் திட்டம் தீட்டினார் கோல்டா மேயர். இதற்குக் ‘கடவுளின் வெஞ்சினம்’ (Wrath of God) என்று பெயரிடப் பட்டது.
(இன்னும் வரும்..)
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
கருத்துப் பேழை
30 mins ago
விளையாட்டு
34 mins ago
இந்தியா
38 mins ago
உலகம்
45 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago