இத்தாலியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை சர்வதேச விண் வெளி நிலையத்தில் பத்திரமாக இறங்கினார் என்று நாசா மையம் தெரிவித் துள்ளது.
சமந்தா கிறிஸ்டோபோ ரெட்டி எனும் அந்தப் பெண், ரஷ்யாவின் ஆண்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் அமெரிக் கரான டெர்ரி விர்ட்ஸ் ஆகியோருடன் ரஷ்ய விண்கல மான சோயூஸ் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந் தார். ரஷ்யாவின் கசகஸ்தான் பகுதியில் இருந்து கிளம்பிய இந்த விண்கலம் ஆறு மணி நேரத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்தது. அங்கு அவர்கள் சுமார் ஆறு மாத காலம் பணியாற்றுவார்கள்.
ஏற்கெனவே அங்கு உள்ள விஞ்ஞானிகளுக் காக இவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதில் 30 கிராம் எடையுள்ள கேவியர் எனும் உணவுப் பொருள் 15 பெட்டிகளும், ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் உறைய வைக்கப்பட்ட பால், சர்க்கரை யில்லாத கட்டங்காப்பி ஆகியவை அடங்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
சினிமா
16 mins ago
தமிழகம்
32 mins ago
கருத்துப் பேழை
40 mins ago
இந்தியா
46 mins ago
விளையாட்டு
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
52 mins ago