இராக்கில் ஷியா பிரிவு மக்களை குறிவைத்து மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
இராக் மற்றும் சிரியாவில் ஷியா பிரிவு மக்கள் மீது தொடர்ச்சியாக சன்னிப் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் பாக்தாதில் ஷியா பிரிவு மக்கள் வழிபடும் அபாஸ் அல் அத்லி மசூதியை குறிவைத்து வந்த மர்ம நபர் அங்கு தொழுகை முடிந்தவுடன் தான் நிறப்பி வந்த வெடிப் பொருட்களை வெடிக்கச் செய்தார். இந்த பயங்கர தாக்குதலில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக இதே பகுதியில் கடந்த சனிக்கிழமை அடுத்தடுத்து நடந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் 26 பேர் கொல்லப்பட்டதும் 96 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago