இராக் குழந்தைகளை மனித வெடிகுண்டுகளாக மாற்றுகிறது ஐ.எஸ்.ஐ.எஸ்.: ஐ.நா.

By செய்திப்பிரிவு

இராக்கின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ், அங்குள்ள குழந்தைகளை மனித வெடிகுண்டுகளாக மாற்றுவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது.

நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் உறுப்பினரும் இராக்குக்கான மனித உரிமைகள் கண்காணிப்பாளருமான லீலா செரோகி, "இராக்கில் 13 வயது சிறுவன் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்களால், பாதுக்காப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை நான் கண்டேன். பொது மக்களை கைது செய்து அவர்களின் பிடியில் வைக்கும் பணிகளில் அங்கு சிறுவர்கள் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.

சில சிறுவர்கள் மனித வெடிகுண்டுகளாக ஈடுபடுத்தப்படுகின்றனர்" என்றார்.

ஐ.நா.வின் அறிக்கையின்படி இராக்கில் தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ்- ஆல், கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 700 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது உடல் உறுப்புகள் வெட்டப்பட்ட நிலைக்கு ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

42 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்