ஈரானின் தென் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 31 பேர் காயமடைந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ’’ஈரானின் சிஸ்கத் நகரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியாதால் மக்கள் சாலைக்கு ஓடி வந்தனர். பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்துக்கு 31 பேர் காயமடைந்துள்ளதாக அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 8,000 பேர் வரை காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
இந்தியா
14 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago