அணுசக்தி குழுவில் இணைந்த இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா குரூப் எனப்படும் அணுசக்தி குழுவில் இணைந்த இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அணு ஆயுத பரவல் தடை நிலைப்பாட்டில் இந்தியா உறுதி யாக உள்ளது. இதையடுத்து அணுசக்தியைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி கூறும் நாடுகளின் குழுக்களில் இந்தியா இணைந்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா குரூப் எனப்படும் அணு சக்தி குழுவில் இந்தியா இணைந்துள்ளது.

இதேபோல ஏவுகணை தொழில்நுட்ப மேலாண்மை குழு (எம்டிசிஆர்), வாசனார் ஒப்பந்தம் (டபிள்யூஏ) ஆகிய அணு சக்தி அமைப்புகளில் உறுப்பினராகவும் தற்போது இந்தியா உள்ளது. தற்போதுள்ள நான்கு அணு சக்தி குழுக்களில் இன்னும் அணு சக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) மட்டுமே இந்தியா இணையவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை யில் ஆஸ்திரேலிய அணுசக்தி அமைப்பில் இணைந்துள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கா வின் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவுரெட் நேற்று கூறும்போது, “அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் அணு சக்தி குழுவில் இணைந்துள்ள இந்தியாவின் செயல்பாட்டை வரவேற்கிறோம். பெரும் அழிவைக் கொடுக்கவல்ல அணுசக்தி ஆயுதப் பரவலைத் தடுக்கும் குழுவில் இணைவதற்காக இந்தியா எடுத்த முயற்சியைப் பாராட்டு கிறோம்.

இந்தக் குழுவில் இந்தியா இணைந்துள்ளதன் மூலம் அந்த பிராந்தியத்தில் அணு ஆயுதப் பரவல் தடைபடுவது இன்னும் அதிகரிக்கும். அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் இந்தியா ஒரு முக்கியம் வாய்ந்த நாடாக உள்ளது. அணு ஆயுதப் பரவல் தடுப்பில் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறோம் ” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்