நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு நேற்று (அக்.23) இரவு வெளியானது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. கரோனா தொற்று காரணமாகப் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு அக். 4-ம் தேதி நடைபெற்றது. தேர்வில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட மையங்களில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர். வழக்கமாக முதல்நிலைத் தேர்வு நடைபெற்றுக் குறைந்தது ஒரு மாதத்துக்குப் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும்.
இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்முறையாகத் தேர்வு நடைபெற்ற 19 நாட்களிலேயே முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10,556 மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். ஜனவரி 8-ம் தேதி முதல் முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற ஆட்சிப் பணிகளுக்கான 790 பணி இடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
2 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
16 mins ago
வலைஞர் பக்கம்
20 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
30 mins ago
இந்தியா
38 mins ago
க்ரைம்
35 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago